Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 மணி நேர விசாரணை : 3 குழந்தைகளை விற்ற தரகர் கணவருடன் கைது

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2019 (17:51 IST)
3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா தற்போது போலீஸாரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளார். அதில் பல பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளன.
விருப்ப ஓய்வு பெற்ற செவிலியரும் தரகருமான அமுதவிடம் எஸ்.பி அருளரசு இதுசம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறார்.
 
அதில் அமுதா வாக்குமூலமாகக் கூறியுள்ளதாவது :
 
2 குழந்தைகளை கொல்லிமலையிலும், ஒரு குழந்தையை சேலம் அன்னதானப்பட்டியிலும் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் குழந்தைகளை வாங்கிய விவரம், யார் யாரிடம் விற்றார் என்பது பற்றி மாவட்ட எஸ்.பி அருளரசு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதில் சேலம் ஓமலூரில் சட்ட விதிப்புறைப்படி ஒரு குழந்தையை தத்துக்கொடுத்துள்ளதாக அமுதா தெரிவித்தார்.
 
தற்போது 11 மணிநேர விசாரணைக்குப் பின்னர் எஸ்.பி அருளரசு தலைமையிலான போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் நாமக்கல் ராசிபுரத்தில் அமுதாவையும் அவரது கணவர் ரவிச்சந்திரனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments