Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய சிறை கைதி

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (08:13 IST)
புழல் சிறை கைதி கழிவறை ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


 

 
சென்னை அண்ணாநகர் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த சேக்முகமது (25) என்பவர், சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் துறையினரால் கடந்த மாதம் 10–ந்தேதி அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 
 
நேற்று மாலை கழிவறைக்கு சென்ற சேக்முகமது நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக கைதிகள், கழிவறைக்குள் சென்று பார்த்தபோது கழிவறையின் ஜன்னல் கம்பியில் சேக்முகமது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
 
இதுபற்றி இன்ஸ்பெக்டர் சிவபாலன் வழக்குப்பதிவு செய்து, கைதியின் தற்கொலை காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments