Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை குறி வைக்கும் பிரதமர் மோடி.! மார்ச் 22-ல் மீண்டும் வருகை..!!

Senthil Velan
வியாழன், 7 மார்ச் 2024 (12:35 IST)
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்ச் 22-ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
 
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
 
அதன்படி, வரும் 22ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். தென்மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 
கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, நடப்பாண்டில் 3 மாதங்களில் 5வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். 
 
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அடுத்தடுத்து பிரதமர் மோடி தமிழ்நாடு வருவது, பாஜக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதோடு, இந்த தேர்தலில் எப்படியும் தமிழ்நாட்டில் இருந்து பாஜகவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிட அக்கட்சி மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது.

ALSO READ: திமுக விருப்ப மனு தாக்கல்.! இன்றே கடைசி நாள்.!!

குறிப்பாக தென் மாவட்டங்களில் பெரிய அளவில் வெற்றி பெற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments