Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. மதம் கொண்ட யானை; விஜயகாந்த் சினம் கொண்ட சிங்கம்: பிரேமலதா அதிரடி!

ஜெ. மதம் கொண்ட யானை; விஜயகாந்த் சினம் கொண்ட சிங்கம்: பிரேமலதா அதிரடி!

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2017 (10:03 IST)
பிரதமர் மோடி கோவை வந்ததையொட்டி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தேமுதிக மகளிர் அணி தலைவியும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா கோவை வந்தார். அப்போது ஊடகங்கள் அவரை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கேட்டனர்.


 
 
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஊடகங்களை சந்தித்த பிரேமலதா அரசியல் கட்சி தலைவர்களை வறுத்தெடுத்துவிட்டார். குறிப்பாக ஸ்டாலின், ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார் அவர்.
 
சில தினங்களுக்கு முன்னர் தமிழக சட்டசபையில் திமுகவினர் செய்த அமளி மற்றும் சபை அவமதிப்பு போன்றவற்றை பற்றி பேசி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். ஸ்டாலின் காமெடி அரசியல் பன்னுகிறார். சின்ன பசங்க போல சட்டை, பனியனை கிழித்துக்கொண்டு வருகிறார்கள்.
 
விஜயகாந்த் வெறும் 29 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு ஜெயலலிதா என்னும் மதம் கொண்ட யானையை சினம் கொண்ட சிங்கமாக ஒண்டிக்கு ஒண்டி எதிர்த்தார். ஆனால் 89 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு சட்டை பனியனை கிழித்துக்கொண்டு வெளியே வருகிறார் ஸ்டாலின் என பிரேமலதா ஒரு பிடி பிடித்தார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments