Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிள் கேப்பில் ஸ்டாலின் பொட்டு பத்தி பிட்டு போட்ட பிரேமலதா!!

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (12:15 IST)
தேமுதிக இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் ஸ்டாலின் பொட்டு வைத்தது குறித்து விமர்சனம் செய்துள்ளார். 
 
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி தேமுதிக சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், அதிமுக அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 
 
நோன்பு நிகழ்ச்சியின் போது பிரேமலதா விஜயகாந்த் பின்வருமாறு பேசினார். விஜயகாந்த் எம்.ஜி.ஆர்-ஐ ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டார். எங்கள் கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலை வைக்க அதுதான் காரணம். இதனாலேயே விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர் என அழைக்கப்படுகிறார். 
இங்கு எல்லா மதமும் ஒன்றுதான். இறைவன் ஒன்றாகதான் நம்மை படைத்தான். ஆனால், கோடுகள் போட்டு நாம் பிரித்துக்கொண்டோம். நாங்கள் கடவுள் இருப்பதாக நம்புகிறோம். 
ஆனால், சிலர் இங்கே பொட்டு வைத்தால் அழித்துவிட்டு, வெளியூர் சென்று வைத்துக்கொள்கிறார்கள். திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவார்கள் என திமுக ஸ்டாலினை விமர்சித்து பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments