தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை.. முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்..!

Siva
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (13:36 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை நேற்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்தனர் என்பதும், இந்த சந்திப்பின்போது சுனில் மற்றும் ஆதவ் அர்ஜூனா இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக அவர் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழக தேர்தல்  செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்ததாகவும் இந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வியூகம் அமைப்பது குறித்தும், கூட்டணி அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் கூட்டணியில்  எந்தெந்த கட்சிகளை சேர்க்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய்யை அடுத்து அவருடைய கட்சியின் நிர்வாகிகளையும் பிரசாந்த் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அடுத்தடுத்த சந்திப்பால் அவர் வரும் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவாக செயல்பட போவதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments