Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தபால் ஓட்டுகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளியது திமுக: திமுக 36, அதிமுக 25 முன்னிலை

Webdunia
வியாழன், 19 மே 2016 (08:44 IST)
கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற, தமிழக சட்டசபை தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவர்கள் மற்றும் காவலர்கள் அளித்த தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தற்போது  தொடங்கியுள்ளது.


 
 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்குகிறது.  முதலில் தபால் ஓட்டுகள் எட்டு மணிக்கு எண்ணப்படுகிறது. அதன்பின், மற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. மொத்தம் 68 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. 
 
தமிழகத்தில் மே 7ஆம் தேதி தபால் ஓட்டு தொடங்கி மே 14 ஆம் தேதி வரை செலுத்தப்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தபால் ஓட்டுகள் செலுத்தியுள்ளனர். அதிக பட்சமாக 4 லட்சம் பேர் தபால் ஓட்டு அளித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
 
சரியாக இன்று காலை எட்டு மணிக்கு தபால் ஒட்டுகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. அதில் திமுக 36 தொகுதிகளிலும், திமுக 25 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. குறிப்பாக திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி 4000 வக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments