Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல தமிழ் நடிகர் ரித்தீஷ் மீது மிரட்டல் புகார்

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2015 (03:53 IST)
பிரபல தமிழ் நடிகர் ரித்தீஷ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மிரட்டல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
 

 
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தமிழ் சினிமா மற்றும் நாடக நடிகர் நடிகைகள் நடிகர் கிச்சா ரமேஷ் தலைமையில் திரண்டு வந்து, ஒரு புகார் மனு அளித்தனர்.
 
பின்பு, நடிகர் கிச்சா ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
நான் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறேன். எனது வீடு சென்னை, விருகம்பாக்கம் கிருஷ்ணா நகரில் உள்ளது. நான், நடிகர் சங்க உறுப்பினராகவும் இருக்கிறேன்.
 
நடிகர் சங்க தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமாருக்கு ஆதரவாக, நானும், எனது ஆதரவாளர்களும் செயல்பட்டு வருகிறோம். அவருக்கு வாக்கு சேகரித்தும் வருகிறோம்.
 
இதனால், எங்கள் மீது கோபம் கொண்டு நடிகர் ரித்தீஷ், பூச்சி முருகன் மற்றும் நடிகர் விஜய் கார்த்திக் ஆகியோர் எங்களை மிரட்டினார்கள்.
 
தற்போது, எனது செல்போனுக்கு ஒரு மிரட்டல் போன் வந்தது. அதில் வட பழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் போல பேசி நடிகர் ரித்தீஷ் மிரட்டல் விடுத்தார். அவரது பேச்சை செல்போனில் பதிவு செய்துள்ளோம். நடிகர் ரித்தீஷ் பேச்சை சி.டி.யாக போட்டு போலீஸ் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன். என் புகார் மீது உரிய நடடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
 
ஆனால், இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. ஜோடிக்கப்பட்டது என்று நடிகர் ரித்தீஷ் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments