Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பொன்னார்..

Arun Prasath
புதன், 9 அக்டோபர் 2019 (14:11 IST)
பிரதமர் மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ள நிலையில், சீன அதிபரின் வருகையை குறித்து ஸ்டாலின் ஆதரித்து பேசியமைக்காக பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ள நிலையில், மாமல்லபுரம் மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின், “சீன அதிபரின் வருகை மிகவும் முக்கியமான ஒன்று. சீன அதிபரை வருகையை நான் ஆதரிக்கிறேன்” என கூறினார். மேலும் சீன அதிபரின் வருகைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மோடி-ஜின்பிங் வருகையை ஆதரித்த பேசியதற்காக முக ஸ்டாலினுக்கு வைகோவிற்கும், பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் கட்சிக்கு அப்பாற்பட்டு நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக மோடி வருகையை எதிர்த்து திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது மோடியும் சீன அதிபரும் சந்திப்பதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments