Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர், வழக்கறிஞருடன் ஆஜரான அமைச்சர் பொன்முடி.. அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (17:45 IST)
அமைச்சர் பொன்முடி இன்று மாலை மகன் கௌதம் சிகாமணி உடன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் ஆஜரானதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு மருத்துவர் உடன் ஆஜராகி இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று காலை முதல் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்த நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை விசாரணை நடைபெற்றது
 
விசாரணைக்கு பின்னர் அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து சற்றுமுன் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  
 
இன்று சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments