Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன்.. வீடு தேடி வரும் என தகவல்!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (18:41 IST)
நாளை முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்படும் என்றும் ரேசன்கடை அதிகாரிகள் வீடு தேடி டோக்கன்களை வழங்குவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
தமிழகம் முழுவதும் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் ரூபாய் 1000 மற்றும் பொங்கல் பொருள்கள் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த பொங்கல் பரிசை வாங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் அதாவது ஜனவரி 3 முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றும் ரேஷன் கடை அலுவலர்கள் வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பிற்கான விநியோகம் செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும் அமைச்சர்கள் அந்தந்த மாவட்டத்தில் தொடங்கி வைப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

கர்வ்ட் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO F27 Pro Plus 5G!

மன்னார்குடியில் பட்டாசு விபத்து: உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணம்.. முதல்வர் உத்தரவு

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments