Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள்: இன்று முதல் முன்பதிவு!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (08:00 IST)
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது சொந்த ஊர் செல்பவர்கள் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இரண்டு மாதங்களுக்கு முன்பே முன் பதிவு செய்துவிடுவது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ரயில்களுக்கு பொங்கல் விடுமுறை காண முன்பதிவுகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இன்றுமுதல் அரசு பேருந்துகளில்  பொங்கல் பண்டிகை விடுமுறைக்கான முன்பதிவு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறை ஆரம்பமாக இருப்பதை அடுத்து இன்று முதல் அரசு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கு படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறை வியாழக்கிழமை முதல் தொடங்குவதால் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது
 
இதனை பயன்படுத்தி சென்னையில் பணிபுரியும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்  இன்று முதல் முன்பதிவு செய்து தங்களது பயணத்தை உறுதி செய்து கொள்ளலாம். கடைசி நேர பரபரப்பு தவிர்ப்பதற்காக அனைவரும் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments