Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மறுநாள் ரேஷன் கடைக்கு வரவும், பொங்கல் பரிசு காத்திருக்கிறது…

Arun Prasath
புதன், 27 நவம்பர் 2019 (17:09 IST)
நாளை மறுநாள் 1000 ரூபாய் பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்த ஆண்டு அரிசி ரேஷன் கார்டுகளுக்கு தலா 1000 ரூபாயும் பரிசு தொகையும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்த நிலையில், தமிழக அரசு ரூ.2363.13 கோடி ஒதுக்கியது.

இந்நிலையில் நாளை மறுநாள் (நவம்பர் 29) சென்னை தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ரேஷன் கடைகளில் அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்திற்கு ரூ.1000 ரொக்கப்பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏழைக்காய் ஆகிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments