Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி முதல்வர் போராடுவது போல் எங்களை போராட வைக்காதீர்கள் - கிரண்பேடிக்கு நாராயணசாமி எச்சரிக்கை

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (10:39 IST)
டெல்லி முதல்வர் போராடுவது போல் எங்களை போராட வைக்காதீர்கள்  என புதுவை கவர்னர்  கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், அம்மாநில கவர்னருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வரும் நிலையில் அவை நாளாக நாளாக முற்றிக்கொண்டே வருகிறது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, அரசின் செயல்பாடுகளில் கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து மூக்கை நுழைக்கிறார். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. நாங்கள் சட்டப்படி செயல் பட விரும்புகிறோம்.
 
டெல்லியில் கவர்னருக்கு எதிராக அம்மாநில முதல்வர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது போல் நாங்களும் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளோம். எனவே கிரண்பேடி ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என கிரண்பேடிக்கு நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments