Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்: பொன்னார் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (09:36 IST)
சமீபத்தில் வைகோ கன்னியாகுமரி மாவட்டத்தில் வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பாஜகவினர் அவருக்கு கருப்புக்கொடி காட்டினர். மேலும் வைகோ வேன் மீது கல்வீச்சும் நடைபெற்றது. அப்போது வைகோ மிக ஆவேசமாக தன்மீது கல்வீசியவர்கள் பாஜகவின் கைக்கூலிகள் என்று பேசினார்.
 
வைகோவின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'வைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன்மீது கல்வீசியது பாஜக கைக்கூலிகள் என வைகோ கூறியது அநாகரீமான வார்த்தைகள் என்றும் கூறினார்.
 
மேலும் தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை கிண்டல் செய்பவர்கள் துரோகிகள் என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், 'கோடிக்கணக்கில் செலவு செய்து திறக்கப்படும் ஆலைகளை உடனே மூடவேண்டும் என்றால் அது சாத்தியமில்லை' என்று ஸ்டெர்லைட் ஆலை குறித்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments