Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏமாத்திட்டாங்க... தோல்வியை ஏற்க முடியாமல் பொன்னார் புலம்பல்?

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (13:56 IST)
உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை,மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
 
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் புதிதாக பிரிக்கப்பட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.   
 
தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாவட்ட கவுனிலர் தேர்தலில் அதிமுகவை விட திமுக முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என பேட்டி அளித்துவிட்டார். 
 
இதனைத்தொடர்ந்து தற்போது பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை,மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அரசியல் ஆதாயத்திற்காக திமுக சிஏஏ, என்ஆர்சி-ஐ எதிர்க்கிறது. இருப்பினும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வழங்கும் தீர்ப்பை தலை வணங்கி ஏற்போம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments