Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் தூங்குபவர்களை கொல்லும் சைக்கோ! – சேலத்தில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (12:12 IST)
கோப்புப்படம்

சேலத்தில் சாலையில் உறங்குபவர்களை மர்மமான முறையில் சைக்கோ கொலையாளி ஒருவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு சாலையோரம் படுத்து உறங்கும் ஆதரவற்ற முதியவர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் மீண்டும் ஒரு முதியவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர் கொலை சம்பவங்களால் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மர்மமான ஒரு நபர் சாலை உறங்கி கொண்டிருந்தவரை கொடூரமான முறையில் கொன்றுவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளான்.

உடனடியாக தனிப்படை அமைத்துள்ள போலீஸார் சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments