Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீ சொல்லுங்க ராஜேந்திரன்… தெறி விஜய் பாணியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காவலர் !

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (14:58 IST)
நிர்பயா கொலை குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து பலரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வரும் நிலையில் காவலர் ஒருவர் வித்தியாசமாக தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட முகேஷ்குமார், அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கு இன்று பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இது சம்மந்தமாக பலரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது மகிழ்ச்சியை டிவிட்டரில் ‘கடைசியாக .. டீ சொல்லுங்க ராஜேந்திரன்.’ எனத் தெரிவித்துள்ளார். இந்த வசனம் தெறி படத்தில் இதுபோன்ற குற்றவாளி ஒருவரைக் கொன்ற பிறகு விஜய் சொல்லும் புகழ்பெற்ற வசனமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்