Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தலைத்தூக்கும் பேனர் கலாச்சாரம்: சிக்கலில் அதிமுகவினர்!

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (11:03 IST)
அனுமதியின்றி பேனர் வைத்ததாக, அதிமுகவை சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது அதிமுக கட்சி பிரமுகரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. 
 
இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் தங்களுடைய ரசிகர்கள் யாரும் தங்களுக்கு பேனர் வைக்ககூடாது என வலியுறுத்தினர்.
 
இந்நிலையில் விருகம்பாக்கம் தொகுதி  அதிமுக எம்.எல்.ஏ. வி.என்.ரவியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி பேனர் வைத்ததாக, அதிமுகவை சேர்ந்த கணேஷ், ரமேஷ் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
பேனர் கலாச்சாரம் மீண்டும் தலைத்தூக்க துவங்கி இருப்பது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதோடு அதிமுகவினருக்கு இது மீண்டும் சிக்கலை கொடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்