Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமுருகன்காந்தி மீது மீண்டும் வழக்குப்பதிவு: அரசுக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (07:09 IST)
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தமிழகத்தின் பல பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது திருமுருகன்காந்தி உள்பட நால்வர் மீது சென்னையிலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதன்படி அரசுக்கு எதிராக பேசியதாக திருமுருகன் காந்தி , டைசன் , பெரியசாமி , அருள்முருகன் ஆகியோர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவு குறித்து கூடுதல் விபரங்கள் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் ‘மே 17’ இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு சிறையில் பாதரசம் கலந்த உணவு வழங்கப்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே அவருக்கு மிகுந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் மே 17 இயக்க நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments