காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் புகாரளிக்கவில்லை.. மரண வாக்குமூலமும் இல்லை: காவல்துறை

Siva
ஞாயிறு, 5 மே 2024 (08:46 IST)
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனக்கு மிரட்டல் இருப்பதாகவும், மரண வாக்குமூலமும் கொடுத்ததாகவும் செய்தி வெளியான நிலையில் காவல்துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
 
மரணமடைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் ஏப்.30 அன்று புகார் அளிக்கவில்லை என்றும், மரண வாக்குமூலம் என்ற பெயரில் உள்ள புகார் மனு எஸ்.பி.யிடம் அளிக்கப்படவில்லை என்றும், கடந்த 2ம் தேதி தான், ஜெயக்குமாரின் மகன் ஜெஃப்ரின் தனது தந்தையை காணவில்லை என உவரி காவல்நிலையத்தில் புகாரளித்தார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும் புகாரளிக்க வந்த போது தான் தனது தந்தையின் அறையில் இருந்ததாக ஜெஃப்ரின் அந்த கடிதம் காவல்துறையினரிடம் அளித்தார். அந்த கடிதத்தில் 30.4.2024 என போடப்பட்டிருந்தது, அந்த கடிதத்தை அதற்கு முன் யாரிடமும் ஜெயக்குமார் அளிக்கவில்லை.
 
அதன்பின் தனிப்படை அமைத்து விசாரித்தபோது, மே 4 அன்று காலை எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார். தற்போது வழக்கு சம்பந்தமாக 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிமாண்டி சாலை' பெயர் மாற்றம்.. எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரை சூட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

ஒரு எம்.பி சீட் வேணும்!.. அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் தேமுதிக!...

72 சீட் தருகிறேன்.. காங்கிரஸ் கட்சிக்கு மெகா வாய்ப்பு கொடுத்த விஜய்.. கூட்டணி உறுதியா?

காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் தக்க வைக்க ஸ்டாலின் எடுக்கும் கடைசி முயற்சி.. சோனியாவிடம் நேரடி பேச்சுவார்த்தை?

ஒரு பக்கம் மகளிர் உரிமைத்தொகை அட்வான்ஸ்.. இன்னொரு பக்கம் கிரிக்கெட் பேட்.. அதிமுக, திமுகவின் தேர்தல் உத்திகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments