Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தை கடத்தியது யார்? - கைரேகையை வைத்து விசாரணை

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (17:28 IST)
ராஜபாளையம் சரக போக்குவரத்துக்கழக பனிமனையில் இருந்து பேருந்தை கடத்தியது யார் என்பதை கைரேகையை வைத்து விசாரணை நடந்துவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

 
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சரக போக்குவரத்துக்கழக பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
 
இந்நிலையில் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டம், திருமாஞ்சோலையில் ரோட்டு ஓரத்தில் மாயமான அந்த பஸ் நிறுத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
பின்னர் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஸ்டீரியங்கில் பதிவான கைரேகைகளும் பரிசோதிக்கப்பட்டது.
 
மேலும் மதுரை-தொண்டி சாலையில் பூவந்தி சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கடத்தப்பட்ட பஸ் ஓட்டி செல்லப்பட்டது பதிவாகியுள்ளது.
 
பேருந்தை ஓட்டி சென்ற மர்ம நபர் குறித்து கேமராவில் பதிவான காட்சியை வைத்தும் கைரேகை நிபுணர்களை வைத்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் இன்னும் ஓரிரு நாளில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்று முதல் நிறுத்தம்! என்ன காரணம்?

கடந்த வார பெரும் சரிவுக்கு பின் ஏற்றத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

முடிந்தது காலாண்டு விடுமுறை.. ஆர்வத்துடன் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள்..!

ஈரானை தாக்க உரிமை உள்ளது; பகீர் கிளப்பும் நேதன்யாகு! - ஈரான் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments