Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி வழக்கில் திடீர் திருப்பம்? : பிலால் மாலிக்கை ராம்குமார் முன்னிலையில் போலீசார் விசாரணை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (14:56 IST)
சுவாதி கொலை வழக்கில், ராம்குமாரிடம் விசாரணை நடத்திவரும் போலீசார், திடீர் திருப்பமாக இன்று காலை, சுவாதியின் நெருங்கிய நண்பர் முகம்மது பிலால் மாலிக்கிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.


 

 
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இதனையடுத்து போலீசார் ராம்குமாரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்குமார் அளிக்கும் தகவல்களை இவ்வழக்கின் முக்கிய ஆதாரமாக சேர்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
 
அதேபோல், சுவாதி கொலை செய்யப்பட்டவுடன், அவர் பிலால் மாலிக் என்ற வாலிபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது. ஆனால், சுவாதியின் நெருங்கிய நண்பராகிய அவரிடம் போலீசார் இதுவரை பெரிதாக விசாரணை ஏதும் நடத்தவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்தது. 
 
இந்நிலையில், பிலால் மாலிக் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டுள்ளார். அவர் தலையில் ஹெல்மெட்டுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
 
சுவாதியுடன் அவருக்கு இருந்த உறவு, ராம்குமாரை பற்றி சுவாதி அவரிடம் கூறியுள்ளாரா?, ராம்குமாரை அவருக்கு முன்பே தெரியுமா?, சுவாதிக்கு வேறு மாதிரியான பிரச்சனைகள் இருந்தனவா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. முக்கியமாக, அந்த விசாரணை முழுவதும் ராம்குமார் முன்னிலையிலேயே நடைபெற்றதாக கூறப்படுகிறது. 
 
இதையடுத்து, சுவாதி வழக்கில் போலீசார் விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments