Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார்

நடிகர் சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார்

Webdunia
செவ்வாய், 31 மே 2016 (06:24 IST)
சென்னை, அடையாறு மேம்பாலத்தில் நடிகர் சூர்யா, தன்னை தாக்கியதாக பிரவீண்குமார் என்ற இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 

 
சென்னை, பிராட்வே திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிரவீண்குமார் (21) தனது பைக்கில் நண்பருடன் நேற்று மாலை பாரிமுனையில் இருந்து அடையாறு நோக்கி சென்று கொண்டு இருந்த போது, அடையாறு திருவிக மேம்பாலத்தில்  முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென்று பிரேக்  போடவே அந்த கார் மீது பிரவீண்குமார் பைக் மோதியது.
 
இதில், தவறு யார் மீது என்று, அந்த காரை ஓட்டி வந்த பெண்ணுக்கும், பிரவீண்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கார் உரிமையாளரான அந்த பெண்ணுக்கும், பிரவீண்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
அப்போது அந்த வழியாக காரில் வந்த நடிகர் சூர்யா தனது காரை விட்டு கீழே இறங்கி, அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக களம் இறங்கி,  பிரவீண்குமார் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார். இதில்பிரவீண்குமார்  நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் அங்கு கும்பல் கூடவே, நடிகர் சூர்யா அங்கிருந்து எஸ்கேப்பாகிவிட்டார்.
 
கன்னத்தில் பளார் வாங்கிய பிரவீண்குமார் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு, காரணம் இன்றி தன்னை நடிகர் சூர்யா தாக்கியதாக கூறி சாஸ்திரிநகர் காவல் நிலயைத்தில்  புகார் அளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments