Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்காந்த் மனைவி பிரேமலதா மீது போலீஸ் வழக்கு பதிவு

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2014 (13:12 IST)
கோபி பேருந்து நிலையத்தில் தேமுதிக. தலைவர் விஜய்காந்த் மனைவி பிரேமலதா வாக்குகள் சேகரித்தபோது அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தைப் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தை அவதூறாக பேசிய பிரேமலதா விஜயகாந்த் மற்றும் காஞ்சிகோவிலை சேர்ந்த கிட்டு என்கிற கிட்டுசாமி ஆகியோர் மீது கோபி நகர அ.தி.மு.க. செயலாளர் சையத் புடான்சா கோபி போலீசில் புகார் செய்தார்.
 
அதன்பேரில் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்துள்ளார்.
 
பிரேமலதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் தே.மு.தி.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments