Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்யப்பட்ட செவிலியர்கள்.. போராட்டத்தில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (10:19 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  செவிலியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில் போராட்டம் செய்த செவிலியர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் கைது செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்களை நிரந்தரமாக்குவது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் போராட்டம் செய்த தொகுப்பூதிய செவிலியர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர். அப்போது திடீரென மயங்கி ஒரு செவிலியர் மயங்கி விழுந்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கைது செய்யப்பட்ட செவிலியர்கள் போலீஸ் அராஜகம் ஒழிக என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 
Edit by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments