Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடிஐ மாணவருக்கு கத்திக்குத்து: 3 பேர் அதிரடி கைது!

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (18:48 IST)
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஐடிஐ மாணவன்  ஒருவரை ஒடஒட விரட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கிண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் ஐடிஐ படித்து வந்தவர் ரஞ்சித். 19 வயதான இவர் தனது பெற்றோர்களுடன் நுங்கம்பாக்கம் அபு தெருவில் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி தனது நண்பரின் அக்கா குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்காக சென்றவர், நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில் பிணமாக கிடந்துள்ளார்.
 
இவரை மர்ம நபர்கள் ஒடஒட விரட்டி கொலை செய்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்தக் கொலை தொடர்பாக போலிஸார் 2 தனிப்படை அமைத்து விசாரித்ததில், வடபழனினயச் சேர்ந்த கார்த்திகேயன், சாலி கிராமத்தைச் சேர்ந்த நவின் குமார், போரூரைச் சேர்ந்த சிவ கணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் கைதான 3 பேரும் செல்போன் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என போலீஸார்க்கு தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. இன்னும் ஒரு வாரத்தில் என்ன ஆகும்?

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள்: இன்று வெளியாகிறது தரவரிசைப் பட்டியல்..!

இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் மனு

சிறுவர் சிறுமிகளுக்கான லிட்டில் செஃப் போட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments