Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் உயர் அதிகாரிகள் ஜெயலலிதாவிற்காக தோப்புகரணம் போடுகின்றனர்: வைகோ ஆவேசம்

Webdunia
திங்கள், 16 மே 2016 (14:51 IST)
இந்த தேர்தலில் கலெக்டரும், போலீஸ் உயர் அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்காக தோப்புகரணம் போடுகின்றனர் என மதிமுக பொதுச்செயலாளரும், தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.


 
 
கலிங்கப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஜெயலலிதாவின் பங்களாவில் கண்டெய்னர் லாரி நின்றிருந்தது தொடர்பாக போலீஸில் தான் அளித்த புகாருக்கு மூன்று நாள் கழித்து அப்படி பணம் எதுவும் இல்லை என கலெக்டரும், போலீஸ் உயர்அதிகாரிகளும் பதில் தெரிவித்தனர். அப்படியென்றால் கலெக்டரும், போலீஸ் உயர்அதிகாரிகளும் ஜெயலலிதாவிற்காக தோப்புகரணம் போடுகின்றனர் என்றார்.
 
மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நடுநிலையாக செயல்படவில்லை எனவும், டிஜிபி அசோக் குமார் எந்த கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுபவர். அவர் பாலுக்கு காவல், பூணைக்கு நண்பன் எனவும் விமர்சித்தார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments