Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிள்ளை குட்டிகளையும், புருஷனையும் பத்தரமா பாத்துகோங்க... ராமதாஸ் டிவிட்!!

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (11:47 IST)
கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள் தான் என பாமக தலைவர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-க்கும் அதிகமான உள்ளது. எனவே இதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    
 
இன்று இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள் தான் என பாமக தலைவர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை போட்டுள்ளார். அதில் அவட் குறிப்பிட்டுள்ளதாவது... 
 
ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் பெண்கள் தான். கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு ஆணையை வீட்டு அளவில் செயல்படுத்தும் கடமையும், பொறுப்பும் இல்லத்தரசிகளுக்கு உண்டு. அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும். 
 
குடும்பத் தலைவரும், குழந்தைகளும் வீட்டு வாசலை விட்டு வெளியே கால்களை எடுத்து வைக்க குடும்பத் தலைவிகள் அனுமதிக்கக் கூடாது. வெளியில் சென்றால் ‘‘கொரோனா நோயை கொள்முதல் செய்யப் போகிறீர்களா?’’ என்று எச்சரித்து தடுத்து நிறுத்த வேண்டும். கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள் தான்! என பதிவிட்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

அமெரிக்காவிலிருந்து வந்த மூன்றாவது விமானம்.. இதிலும் பயணிகளுக்கு விலங்கிடப்பட்டதா?

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments