பாமகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்! மேடையில் அறிவுறுத்திய உதயநிதி ஸ்டாலின்!?

Prasanth K
செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (15:33 IST)

பாமகவில் ராமதாஸ் அன்புமணி இடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில் பாமகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய அவர் “சேலம் மாவட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. பாமக எம்.எல்.ஏக்களான அருள் மற்றும் சதாசிவம் நமது கூட்டணி கிடையாது. ஆனாலும், இருவரும் அரசு திட்டங்களுக்காக போட்டிப்போட்டுக் கொண்டு ஒற்றுமையாக பாராட்டி உள்ளனர்.

 

பாமகவினர் இதேபோல ஒற்றுமையாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும்” என பேசியுள்ளார்.

 

அன்புமணி - ராமதாஸ் இருவரும் ஒன்றாக இருந்து பாமகவை வலுப்படுத்த வேண்டும் என்பதைதான் உதயநிதி இருதரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்களையும் சிலேடையாக பயன்படுத்திக் குறிப்பிடுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments