தேவர் குருபூஜைக்காக பிரதமர் மோடி தமிழகம் வரவில்லை: அண்ணாமலை

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (16:33 IST)
தேவர் குரு குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என செய்திகள் வெளியான நிலையில் அந்த செய்தி தவறானது என்றும் அக்டோபர் 30-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
அக்டோபர் 30-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்
 
எங்களை பொறுத்தவரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை நாங்கள் மதிக்கின்றோம் என்றும் அவரது குரு பூஜையில் நாங்கள் கலந்து கொள்ள விரும்புகிறோம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர இருக்கிறார் என்ற செய்தி எங்கிருந்து கிளம்பியது என்று எனக்கு தெரியவில்லை என்றும் பிரதமரின் பயணத் திட்டங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே வகுக்கப்படும் என்பதால் பிரதமர் தமிழகம் வருவதற்கான திட்டம் இதுவரை வகுக்கப்படவில்லை என்றும் எனவே அவர் தமிழகம் வரவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து பிரதமர் மோடி தேவர் குரு பூஜையில் கலந்து கொள்வதாக கூறப்பட்ட செய்தி வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments