பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்: தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (14:29 IST)
பிளஸ் டூ மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்கம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. 
 
நாளை முதல் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பிளஸ் டூ மாணவர்கள் பிற்பகல் 2 மணி முதல் ஹால்டிக்கெட்டுக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறை தேர்வு மற்றும் மார்ச் மாதம் எழுத்து தேர்வு தொடங்க இருப்பதை அறிந்து ஜனவரி 4 முதல் அதாவது நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிளஸ்1 மாணவர்களுக்கு மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments