நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்தலின் முடிவுகள் இன்று வெளியானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கிய +2 வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவதும் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை 10.30 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது.