Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் இல்லைனா பெட்ரோலும் இல்ல! – பெட்ரோலிய வணிகர் சங்கம் கறார்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (10:19 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல் நிலையங்களும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் முழு நேர, பகுதி நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்து முயற்சியில் தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கமும் புதிய கட்டுப்பாடை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் பெட்ரோல், டீசல் நிரப்ப வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அப்படி அணிந்திராத பட்சத்தில் அவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படாது. இந்த கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments