Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடித்து மிதித்து விசாரிக்குறாங்க: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கைதான இளைஞர் கதறல்!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (16:41 IST)
அடித்து மிதித்து விசாரிக்குறாங்க: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கைதான இளைஞர் கதறல்!
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கைதான இளைஞர் ஒருவர் தன்னை போலீசார் அடித்து மிதித்து விசாரிக்கின்றனர் என்று கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மதுரையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக எஸ்டிபி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அபுதாகிர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்
 
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர் காவல் நிலையத்தில் ஜன்னலருகே வந்து தன்னை அடிக்கிறார்கள் மிதிக்கிறார்கள் என்று கதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இதனை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக வாகனத்தில் ஏற்ற போலீசார் முயன்றபோது வாகனத்தில் ஏற அடம்பிடித்து தாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து அவரை வாகனத்திற்குள் போலீசார் வலுக்கட்டாயமாக ஏற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments