Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200வது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை: சந்தேகிக்கும் பி.டி.ஆர்!!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (08:26 IST)
பெட்ரோல் டீசல் விலை மாறாமல் இருப்பது குறித்து மத்திய அரசிடம் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.


கடந்த சில மாதங்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் அதாவது 200வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை ஆகி வருகிறது.  

இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்துள்ள இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாறாமல் இருப்பது குறித்து மத்திய அரசிடம் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருப்பது ஏன்? ஒருவேளை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவிடாமல் சில சக்திகள் பாதுகாக்கின்றன்னவோ…

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments