Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலையை உடைத்த மர்ம நபர்கள்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (11:09 IST)
சமீப காலமாக பெரியார் குறித்து விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. ரஜினிகாந்தை மன்னிப்பு கேட்க சொல்லி பெரியாரிய ஆதரவு இயக்கங்கள் போராட்டம் நடத்தின. ஆனால் ரஜினிகாந்த் ஆதாரங்களோடு பேசியிருப்பதாக மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

ஒருபக்கம் பாஜகவினர் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தாலும், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக அமைச்சர்களோ பெரியாருக்கு ஆதரவாகவே பேசியுள்ளனர். இதனால் கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரம் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் சாலைவாக்கம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments