Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர் – பெரம்பலூரில் காவல் நிலையம் மூடல்!

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (13:27 IST)
பெரம்பலூரில் கொரோனாவால் காவலர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1323 ஆக உள்ள நிலையில் சிகிச்சையில் குணமாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 10 மருத்துவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இப்போது ஒரு காவல் அதிகாரிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் வி களத்தூரில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவருடன் பணிபுரிந்த காவலர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையம் முழுவதும் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் மீண்டும் சரியாகும் வரை அருகிலேயே ஒரு வேனில் நடமாடும் காவல்நிலையத்தை அமைத்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளது.

இதே போல காலையில் சென்னையில் ஒரு பத்திரிக்கையாளருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments