Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’எவ்ளோ திமிர் இருந்த கம்மி ரேட்டுக்கு கவர் விப்ப?’- கடைக்காரரை தாக்கிய நபர்!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (14:51 IST)
பழனியில் குறைந்த விலைக்கு மொபைல் கவர் விற்றவரை மற்றொரு கடைக்காரர் தாக்கி வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனியில் சுந்தர்சன் என்ற நபர் கடைவீதியில் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் மதுரையை சேர்ந்த ராஜன் என்பவர் வறுமை காரணமாக ப்ளாட்பாரத்தில் நின்று செல்போன் கவர்கள், ஹெட்செட் போன்றவற்றை விற்று வந்துள்ளார்.

சுந்தர்சனின் கடையில் உள்ள பொருட்களை விட ராஜனிடம் குறைவான விலையில் மொபைல் கவர்கள் கிடைத்ததால் பலரும் ராஜனிடம் பொருட்கள் வாங்கியதாக தெரிகிறது. ராஜனால் தனது வியாபாரம் நஷ்டமடைவதாக ஆத்திரமடைந்த சுந்தர்சன், ராஜனை தாக்கி அதை வீடியோவும் எடுத்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சுந்தர்சனை கைது செய்துள்ளனர். வறுமையால் கவர் விற்கும் ப்ளாட்பார்ம் கடைக்காரரை சுந்தர்சன் தாக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments