Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென பழுதான பாம்பன் பாலம்: ரயில்கள் ரத்தானதால் பயணிகள் அதிருப்தி

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:00 IST)
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் இன்று மாலை திடீரென பழுதானது. இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயிலும், சேது விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து ராஜஸ்தான் செல்லும் அஜ்மீர் விரைவு ரயில் இரவு 10.15க்கு புறப்படுவதற்கு பதிலாக நாளை காலை 7.15க்கு புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அஜ்மீர் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இரவு முழுவதும் பயணிகள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பழுதான பாம்பன் ரயில் பாலத்தை பழுதுநீக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், இன்று இரவுக்குள் பழுது சரிசெய்யபப்டும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

அடுத்த கட்டுரையில்
Show comments