2021ல் என்ன அதிசயம் நடக்கும்? ரஜினிக்கு ப.சிதம்பரம் கேள்வி

Webdunia
ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (13:30 IST)
சமீபத்தில் நடைபெற்ற கமல்ஹாசன் 60 என்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசிய போது 2021 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ’அதிசயம்-அற்புதம்’ நடக்கும் என்றும் அந்த அதிசயம் அற்புதத்தை பொதுமக்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்
 
ரஜினி கூறிய அதிசயம் அற்புதம் என்ற இரண்டே இரண்டு வார்த்தை மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. முதல்வர் பழனிசாமி முதல் கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் இதற்கு பதில் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இது நாள் வரை டெல்லி திகார் சிறையில் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் ரஜினியின் அதிசயம் அற்புதம் குறித்து கருத்து கூறிய போது ’20210இல் என்ன அதிசயம் என்ன அற்புதம் நடக்கும் என்பதை ரஜினி தான் கூற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்
 
இதே ப சிதம்பரம் அவர்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டி கட்டிய ஒருவர் தான் பிரதமராக வேண்டும் என்று ரஜினி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments