Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (08:10 IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 
 
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தீவிரமடைந்துள்ளது, வட கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகம், ஆந்திரா, கேராளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
 
கேரளாவில் இன்னும் சில தினங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்தால் தெற்கு, மேற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா.. வீடியோ பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி..!

சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனம்..? மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா!

நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்; 2026ல் எங்களுக்கே வெற்றி: டிடிவி தினகரன் பேட்டி

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments