Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''திமுக எதிரி; பழனிசாமி துரோகி''...ஓபிஎஸ் - டிடிவி.தினகரன் இணைந்து செயல்பட முடிவு

Webdunia
திங்கள், 8 மே 2023 (21:07 IST)
ஓபிஎஸ் , அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இன்று  சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் இச்சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது இருவரும் இணைந்து கூட்டாக அளித்த பேட்டியில்,  ''கடந்த காலங்களை மறந்துவிட்டு இருவரும் ஒன்றாக இணைந்துள்ளோம்.  சசிகலா தற்போது வெளியூர் சென்றுள்ளதால் விரைவில் அவரைச் சந்திப்பேன். தொண்டர்கள் மனதில் உள்ள அடிப்படையில், இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம் என்று  ஓபிஎஸ் கூறினார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியதாவது:

எங்களுக்கு இடையே எந்தப் பகையும் இல்லை. ஆணவத்துடன், அரக்கர்கள் போல் செயல்படுபவர்களிடமிருந்து அதிமுகவை மீட்போம். பன்னீர்செல்வத்தை நம்பி இருட்டில் கூட கைப்பிடித்தபடி செல்ல முடியும். பழனிசாமியை நம்பி செல்ல முடியுமா?

திமுக எதிரி, பழனிசாமி துரோகி  நான் பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்தேன் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments