அதிமுகவை யாரும் பிடிக்க முடியாது; சரியாக வழி நடத்துகிறோம்! – ஓபிஎஸ் பதில்!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (11:12 IST)
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவற்றை நிறைவேற்ற கோரி அதிமுக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதிமுகவை யாரும் பிடிக்க முடியாது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியமைத்த நிலையில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுகவை கண்டித்தும், மக்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி இன்று அதிமுக தமிழக அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் “தமிழகத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை மக்களை ஏமாற்றாமல் நிறைவேற்ற வேண்டும் என்றே போராட்டம் நடத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் அதிமுகவை மீட்போம் என டிடிவி தினகரன் பேசியுள்ளது குறித்து பேசிய அவர் “அதிமுகவை யாரும் பிடிக்க முடியாது. கடந்த நான்கரை ஆண்டுகளாக இருவருமாக சிறப்பாக கட்சியை வழி நடத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments