இரட்டை இலை சின்னம் கேட்டு என்னிடம் வந்தால் கையெழுத்து போடுவேன்: ஓபிஎஸ்

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (18:22 IST)
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளர் என்னிடம் வந்தால் அவருக்காக கையெழுத்து போடுவேன் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தனியாக வேட்பாளரை நிறுத்தி இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் கேட்டு வந்தால் கையெழுத்திடுவேன் என்றும் இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் தமிழக மக்களும் அதிமுக ஒன்று பட வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments