Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு அணிகளும் இணையாது - ஓ.பி.எஸ் திட்டவட்டம்

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (13:42 IST)
அதிமுக கட்சியில் உள்ள இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுகவில் ஓ.பி.எஸ் அணி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணி என இரு அணிகள் செயல்படுகிறது. இரு அணிகளும் இணைவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனாலும், சில கோரிக்கைகளில் ஓ.பி.எஸ் அணி உறுதியாக இருப்பதால், இதுவரை பேச்சுவார்த்தை கூட நடைபெறவில்லை.
 
அந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ் எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவை கலைத்து விடுவதாக அறிவித்தார். 
 
மேலும், சமீபத்தில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர் “ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை நாங்கள் ஆதரித்துள்ளோம். ஜெயலலிதா உயிரோடு இருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுத்திருப்பார். அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு இனி வாய்ப்பே இல்லை” என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
இவரின் அறிவிப்பு முதல்வர் எடப்பாடி அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments