Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் வீடு வீடாக மக்களை சந்திக்க வருகிறார்: தொடங்கியது அதிரடி அரசியல்!

ஓபிஎஸ் வீடு வீடாக மக்களை சந்திக்க வருகிறார்: தொடங்கியது அதிரடி அரசியல்!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2017 (11:30 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் கட்டாயத்தின் அடிப்படையில் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக நேற்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் பல்வேறு குற்றாட்டுகளை சசிகலா தரப்பின் மீது வைத்து நாட்டையே உலுக்கினார் ஓபிஎஸ்.


 

 
 
ஒட்டுமொத்த தமிழகமும் பன்னீர்செல்வத்தை உற்றுநோக்கி வருகிறது. அவருக்கான ஆதரவும் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் பன்னீர்செல்வம்.
 
இந்த சந்திப்பின் போது தனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிப்பேன் என கூறினார். தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் மக்களை நேரில் சந்தித்து பேசப்போவதாக கூறினார். கிராமம், கிராமமாக, வீடு வீடாக மக்களை சந்திப்பேன் என கூறியுள்ளார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
 
மேலும் ஆளுநர் சென்னை வந்ததும் அவரை போய் சந்திக்க உள்ளதாகவும், ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவதற்கான காட்டாயம் ஏற்பட்டால் கண்டிப்பாக ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவேன் என கூறியுள்ளார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments