Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்! – ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (11:51 IST)
மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.4 லட்சம் தருவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ள எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ”நிவர் புயல் மற்றும் வெள்ளத்தின்போது உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் வழங்குவது ஏற்புடையது அல்ல. குறைந்த பட்சம் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments