Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்! – ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (11:51 IST)
மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.4 லட்சம் தருவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ள எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ”நிவர் புயல் மற்றும் வெள்ளத்தின்போது உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் வழங்குவது ஏற்புடையது அல்ல. குறைந்த பட்சம் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments