Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வெறும் ரூ.98 ஆயிரம் மட்டுமே: மார்ட்டின் மனைவி

Webdunia
திங்கள், 6 மே 2019 (21:13 IST)
லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் சமீபத்தில் ஐந்து நாட்கள் தொடர் சோதனை செய்தபோது கோடிக்கணக்கான பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளிவந்தது.
 
ஆனால் கோவையில் எங்கள் இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ98,820 மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் எங்கள் வீட்டினுள் பாதாள அறையோ, கட்டிலோ அல்லது படிகட்டுகளோ இல்லை என்றும், இது தொடர்பாக வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும் லீமா ரோஸ் தெரிவித்தார்.
 
வருமான வரித்துறையினர் கைப்பற்றிய பணம் எவ்வளவு என்பது குறித்த அத்துறையின் அதிகாரிகள் அதிகாரபூர்வமாக எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments