ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு எம்.எல்.ஏக்கள் 12ஆக உயர்வு

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (04:06 IST)
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியில் ஏற்கனவே 11 எம்.எல்.ஏக்களும், 12 எம்பிக்களும் ஆதரவாக உள்ள நிலையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.




கூவத்தூரில் இருந்து தப்பி சென்றவரும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தவ்ருமான கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் நேற்று ஓபிஎஸ் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் அவருக்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் நேற்று திருவெற்றியூரில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய  அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் விரைவில் தங்களின் அணிக்கு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின்னர் இன்னும் ஒருசில எம்.எல்.ஏக்கள் அணி மாறுவார்கள் என்று ஓபிஎஸ் அணியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தியாரின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன்

கோவை விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடு.. வெளியேற்றப்பட்ட தவெக தொண்டர்கள்..!

ஈரோட்டுக்கு வருபவர் பக்கத்தில் இருக்கும் கரூருக்கு வராதது ஏன்? விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள்..!

சர்க்கரை நோயின் மாத்திரைகள் தரம் குறைந்தவைகளா? திரும்ப பெற உத்தரவு..!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments